பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோவில் திருவிழாவிற்கு பேனர் வைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோவில் திருவிழாவிற்கு பேனர் வைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு வணிக வைசியர் தெருவை சேர்ந்த கலியனாண்டி என்பவரது மகன் கல்யாணகுமார் (19). கல்யாணகுமார் கிருஷ்ணன் கோவில் தனியார் கல்லூரியில் B.Com. CA இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் நேற்று நள்ளிரவில் வத்திராயிருப்பு மந்தை மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு பேனர் வைப்பதற்காக பேனர் கம்பியை தூக்கிக் கொண்டு செல்லும் போது வத்திராயிருப்பு நாடார் பஜார் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் வயரில் உரசி மின்சாரம் தாக்கியதில் கல்யாணகுமார் மயக்கம் அடைந்துள்ளார்.

உடனே இளைஞரை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது கல்யாணகுமாரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.தற்போது கல்யாணகுமாரின் உடல் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story