இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பலி !

இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பலி !

விபத்து

இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பலியான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை- திருப்பத்தூர் சாலை கிராம வங்கி எதிர்புறம் வசித்து வருபவர் செல்வ பாண்டியன். இவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியர். இவர்களது மகன் திலக் ஆனந்த் (18). இவர் தேவகோட்டையில் இருந்து திருப்பத்தூர் சாலையில் ராம்நகரை கடந்து அதிவேகமாக தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தின் மீது மிக வேகமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த திலக் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த தேவகோட்டை காவல் நிலையத்தினர், இறந்தவரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே திலக் ஆனந்த் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளான காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Tags

Next Story