பெரிய சேங்கல் அருகே வாகனம் சாலையோர பாலம் சுவற்றில் மோதி இளைஞர் பலி

பெரிய சேங்கல் அருகே இரவு நேரத்தில் டூவீலரில் சென்ற இளைஞரின் வாகனம் சாலையோர பாலம் சுவற்றில் மோதி சம்பவ இடத்தில் உயிரிழப்பு.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, பெரிய சேங்கல் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் அருண்குமார் வயது 26. இவரது உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் வயது 19. இவர்கள் இருவரும் பஜாஜ் பல்சர் வாகனத்தில், ஏப்ரல் 21ஆம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில், காணியாளம்பட்டியில் இருந்து மதுக்கரை செல்லும் சாலையில் டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர்.

இவர்களது வாகனம் காணியாளம்பட்டி அருகே உள்ள புதுகுளத்துப்பாதை பகுதியில் உள்ள பாலத்தின் சுவற்றில், எதிர்பாராத நேரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருண்குமாருக்கு தலையில் பலத்த காயும் ஏற்பட்டு, சம்பவ இடத்தில் துடி துடித்து உயிரிழந்தார். இதே டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த தினேஷுக்கு வலது கால் விரல்களில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த சம்பவம் தொடர்பாக தினேஷ் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த அருண் குமாரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வேகமாக டூவீலரை ஓட்டி ஏற்பட காரணமான அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மாயனூர் காவல்துறையினர்.

Tags

Next Story