இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு !

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு !
பலி
பேச்சியம்மன் படித்துறை அருகே இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு - போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை வைகை தென்கரையோரம் பேச்சியம்மன் படித்துறை அருகே இன்று காலை ஒருவர் கொலை செய்து கிடப்பதாக திலகர் திடல் காவல் நிலையத்திற்கு தகவல் வர போலீசார் அங்கு சென்று பார்த்த போது இறந்தவரின் உடமைகளை சோதித்ததில் ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த செய்யது முகமது அல்பவாஸ் (25) என தெரிந்தது. வலது பக்க மார்பிலும் வயிற்றின் அடிபகுதியிலும் கிருஷ்திகா என்ற பெயரை பச்சை குத்தி உள்ளார். சம்பவ இடம் அருகே இருசக்கர வாகனமும் இருந்துள்ளது. இவர் டவுன்ஹால் ரோட்டில் உள்ள லாட்ஜில் ஒரு மாதம் தங்க வேண்டுமென ரூம் எடுத்து 17 ஆயிரம் செலுத்தி 318வது அறையை எடுத்துள்ளார். இவரின் தலையில் இடது புறம் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து கொலையாளிகளை கண்டறிந்து வருகின்றனர்.

Tags

Next Story