வந்தவாசி அருகே பாம்பு கடித்து இளைஞர் பலி

வந்தவாசி அருகே பாம்பு கடித்து இளைஞர் பலி

கோப்பு படம் 

வந்தவாசி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பாம்பு கடித்து உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஸ்ரீ ரங்கராஜபுரம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் (22) விவசாய நிலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டின் குறுக்கே பாம்பு வந்ததை கண்டு நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அவரை பாம்பு கடித்துள்ளது. அங்கிருந்தவர்கள் வேல்முருகனை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.இது குறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story