கண்மாயில் குளிக்க சென்ற வாலிபர் பலி

கண்மாயில் குளிக்க சென்ற வாலிபர் பலி

பிரவீன் 

திருப்பரங்குன்றம் அருகே கண்மாயில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சௌந்தர பாண்டியன் இவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் முத்துப்பாண்டி என்ற பிரவின் (வயது 19) இவர் பலசரக்கு கடையில் வேலை பார்த்து வருகிறார். பிரவின் இன்று மாலை தனது சித்தப்பா ரவிக்குமார் குமார் மற்றும் உறவினருடன் மாட க்குளம் கண்மாய்க்கு சென்று குளித்தனர்.

அப்போது கண்மாய் சூழலில் சிக்கிய பிரவீன் நீரில் மூழ்கி தத்தளித்தார். இதைக் கண்ட சித்தப்பா ரவிக்குமார் நீரில் மூழ்கிய முத்துப்பாண்டியை காப்பாற்றி வெளியே கொண்டு வந்தார். பிரவின் உயிருக்கு போராடிய நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி முத்துப்பாண்டி என்ற பிரவீன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags

Next Story