கண்மாயில் மூழ்கி இளைஞர் பலி

கண்மாயில் மூழ்கி இளைஞர் பலி
சிவகாசி:கண்மாயில் மூழ்கி இளைஞர் பலி....
விருதுநகர் மாவட்டம், காமராஜர்புரம் பகுதியில் கண்மாயில் மூழ்கி இளைஞர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே காமராஜர்புரம் காலனியை சேர்ந்தவர் கண்ணன் மகன் செல்வகணேஷ் (20). இவர் சம்பவத்தன்று தனது நண்பர் சிவபிரபு வீரப்பன் என்பவருடன் சிவகாசி பெரியகுளம் கண்மாயில் குளித்துள்ளார். நீச்சல் தெரியாத செல்வகணேஷ் எதிர்பாராத வகையில் கண்மாய் நீரில் மூழ்கி உள்ளார்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிவகாசி தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து செல்வகணேஷ் உடலை மீட்டனர்.இச்சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story