மோகனூரில் இளைஞர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

மோகனூரில் இளைஞர் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து வளையபட்டி செல்லும் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக மோகனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்றனர். உடலை மீட்பதற்காக நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றினர். இது குறித்து மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த நபர் மோகனூர் பெரியசாமி காலனி சேர்ந்த பார்த்திபன் (37) என்பதும் இவருக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் இருப்பது தெரியவந்தது மேலும் நாமக்கல்லில் உள்ள இ சேவை மையத்தில் பணிபுரிந்த போது பலரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக காவல் துறையில் வழக்கு பதியப்பட்டு அதன் மூலம் சிறைக்கு சென்றுள்ளார்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த பார்த்திபன் கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவராகவே தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது அடித்து கொலை செய்து கிணற்றில் யாராவது வீசினார்களா ? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story