பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு

பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், பெரம்புரா பகுதியை சேர்ந்தவர் சத்யன். இவரது மகன் ஆனந்த் (வயது 22). இவர் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் மருத்து வக்கல்லூரியில் நர்சிங் முது நிலை படிப்பான அலைடு ஹெல்த் சயின்ஸ் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு கல்லூரி எதிரே நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த ஆனந்த் கடைக்கு செல் வதாக கூறி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந் தார். இதனைக்கண்ட அவரது நண்பர்கள் ஓடிச்சென்று ஆனந்த்தை மீட்டு சிகிச்சைக் காக தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனு மதித்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story