மின்வேலியில் சிக்கி இளைஞர் பலி!

மின்வேலியில் சிக்கி இளைஞர் பலி!

இளைஞர் மரணம்

சோளிங்கர் அருகே மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ஜம்புகுளம் பகுதியை சேர்ந்தவர் கோகுல் (21). இவர் கால்நடைகள் வளர்த்து வந்தார். இந்த நிலையில் கால்நடைகளுக்கு புல் அறுப்பதற்காக தனது நிலத்துக்கு சென்றுள்ளார். அதேப்பகுதியை விவசாயி ஒருவர் சாகுபடி செய்துள்ள கரும்பு தோட்டத்தை காட்டுபன்றிகள் சேதப்படுத்தாமல் இருக்க மின்வேலி அமைத்திருந்தார்.

இதில் எதிர்பாராத விதமாக கோகுல் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் ஆகியும் கோகுல் வீட்டிற்கு திரும்பாததால் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது அவர் மின் வேலியில் சிக்கி இறந்தது தெரியவந்தது. இது குறித்து சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story