நாகர்கோவில் சாலையில் வாலிபர்கள் கோஷ்டி மோதல் 

நாகர்கோவில் சாலையில் வாலிபர்கள் கோஷ்டி மோதல் 

நாகர்கோவில் சாலையில் வாலிபர்கள் சண்டையிடும் வீடியோ வைரலானது.


நாகர்கோவில் சாலையில் வாலிபர்கள் சண்டையிடும் வீடியோ வைரலானது.

திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த வேன் ஒன்று நேற்று இரவு நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் நின்று கொண்டிருந்தது. அப்போது வேனில் இருந்தவர்கள் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பி ஆடிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் கோட்டார் பகுதியை சேர்ந்த சிலர் காரில் வந்தனர்.

வேனில் அதிக சத்தத்துடன் பாடல்கள் பாடிக்கொண்டிருந்ததை பார்த்தது அவர்கள் காரில் இருந்து இறங்கி சென்று வேனில் இருந்தவர்களை கண்டித்துள்ளனர். இதில் இரு தரப்பினர்களின் மாறி மாறி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் சுற்றுலா வேனில் இருந்தவர்கள் தாக்கப்பட்டனர். இதில் ஒருவர் காயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை அந்த பகுதியில் நின்ற சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சிறிது நேரத்தில் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பினர். இதை அடுத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த எஸ் பி சுந்தரவதனம் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி குடிபோதையில் தகராறு செய்ததாக கோட்டார் பகுதியை சேர்ந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்

Tags

Next Story