சிவகாசியில் இளைஞர் வெட்டி படுகொலை

சிவகாசியில் இளைஞர் வெட்டி படுகொலை
இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட இடத்தில் ஆய்வு செய்யும் போலீசார்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் நெல்லுகுத்தி பாறை தெருவை சேர்ந்த லாரி ஓட்டுனர் திருநீலக்கண்ணன் மகன் குணசேகரன்( வயது 25). இவர் அச்சகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் தனது வீட்டின் வாசல் முன்பு இரவு நேரத்தில் அமர்ந்திருந்த குணசேகரனை நைசாக பேசி அழைத்துச் சென்ற, 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரது வீட்டின் பின்புறம் உள்ள முள் செடி பகுதிக்குள் வைத்து நீளமான பட்டாகத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் குணசேகரனை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது.

ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே குணசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். கொலை குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குணசேகரனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தை விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, சிவகாசி வட்டார காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்செயன் தலைமையிலான ஏராளமான போலீஸார்கள் கொலை நடந்த பகுதியில் குவிக்கப்பட்டு, போலீஸ் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.

கொலை சம்பவம் பற்றிய புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருத்தங்கல் போலீசார், கொலைக்காண காரணம் என்ன? கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? யார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முடுக்கி விட்டு, தனிப்படை பிரிவு போலீஸ்காரர்களை அமைத்து தப்பி யோடிய கொலையாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

இரவு வேளையில் வாலிபர் ஒருவரை மர்ம கும்ப கும்பல் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பியோடிய சம்பவம் திருத்தங்கல் நகர மக்களிடையே பெரும் அச்சத்துடன் கூடிய அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story