வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

வேலைகிடைக்காத மன அழுத்ததில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சூலூர் இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் கட்டிட தொழில் செய்து வருகிறார். இவரது மகன் தேவராஜ் (22) பி.காம் படித்துவிட்டு அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தினக் கூலியாக பணியற்றி வருகிறார்.படிப்பிற்கு தகுந்த வேலை தனக்கு அமையவில்லை என மன அழுத்தத்தில் இருந்தவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.அறை வெகு நேரமாக மூடப்பட்டு இருந்தால் சந்தேகம் அடைந்த பாலசுப்பிரமணியம் ஜன்னல் வழியாக பார்த்தபோது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்.

இதுகுறித்து சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தேவராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.வேலை அமையாத காரணமாக இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கம் பக்கம் வசிப்பவர்கள் மற்றும் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story