இளைஞர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை.

இளைஞர்  தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை.

சுரேஷ்

வாணியம்பாடி அருகே எலக்ட்ரிக்கல் கடையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன கல்லுபள்ளியை சேர்ந்தவர் சுரேஷ் (34) .இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மாலதி என்ற மனைவி உள்ளார். இவர் தும்பேரி கூட்டு சாலையில் கோபால் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக் கடையில் 1 வருடமாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை கடையை திறந்து பொருட்களை வெளியே வைத்துவிட்டு உள்ளே சென்றவர் அங்குள்ள ஒரு கயிற்றால் தூக்கு மாட்டிக் கொண்டு துடித்துக் கொண்டிருந்தார்.

அதை பார்த்த பக்கத்து கடைக்காரர் அவரை மீட்ட போது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த அம்பலூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story