இருசக்கர வாகனம் மீது டெம்போ மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம்
![இருசக்கர வாகனம் மீது டெம்போ மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் இருசக்கர வாகனம் மீது டெம்போ மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம்](https://king24x7.com/h-upload/2024/05/16/514583-image3a1000897956.webp)
விபத்து
கன்னியாகுமரி மாவட்டம்,குழித்துறை அருகே இருசக்கர வாகனம் மீது டெம்போ மோதிய விபத்தில் வாலிபர் படுகாயமடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம்,குழித்துறை அருகே மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் அஜய்.வாலிபரான இவர் இரு சக்கர வாகனத்தில் குழித்துறையில் இருந்து களியக்காவிளை சென்றார். கல்லுகட்டி பகுதியில் சென்றபோது எதிரே திருவனந்தபுரத்தில் இருந்து வாழைக்காய் பாரம் ஏற்றிய டெம்போ வந்தது.
அந்த வாகனம் எதிர்பாராதவிதமாக அஜய் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.இதில் அஜய் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள் ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது குறித்து களியக்காவிளைபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story