முன்னாள் எம்எல்ஏ தலைமையில் பாஜகவில் இணைந்த இளைஞர்கள்

முன்னாள் எம்எல்ஏ தலைமையில் பாஜகவில் இணைந்த இளைஞர்கள்

பாஜகவில் இணைவு

தர்மபுரி மாவட்ட.ம், பாலக்கோட்டில் முன்னாள் எம்எல்ஏ தலைமையில் பாஜகவில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்தனர்.

தர்மபுரி மாவட்டம் , பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி பாலக்கோடு பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை தருமபுரி மாவட்ட பொறுப்பாளர் மற்றும் தர்மபுரி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் பாஸ்கர் முன்னிலையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்கள் அனைவரையும் வரவேற்ற மாவட்ட பொறுப்பாளர் பாஸ்கர் பாஜக கட்சி துண்டு போர்த்தி வரவேற்று கட்சியின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story