சொத்து தகராறு - அண்ணியை கொலை செய்த மைத்துனன்

சொத்து தகராறு - அண்ணியை கொலை செய்த மைத்துனன்

சடலம் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் அருகே சொத்து தகராறில் அண்ணியை கொன்று பாழடைந்த கிணற்றில் வீசியதாக மைத்துனனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மாத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆம்பூர் பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி வயது 35 இவரது கணவர் சேவியர் அந்தோணிசாமி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் அந்தோணி சாமியின் தம்பி ராயப்பனுக்கும் ஆரோக்கியமேரி இருவருக்கும் இடையே நில தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் தோட்டத்துக்கு சென்ற ஆரோக்கியமேரி வீடு திரும்பவில்லை என்றும் ராயப்பன் மீது சந்தேகம் இருப்பதாகவும் மேரியின் அண்ணன் சகாயராஜ் மாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆரோக்கிய மேரியின் தோட்டத்துக்கு அருகே இருந்த பாழடைந்த கிணறு சந்தேகத்திற்கு இடமாக மூடப்பட்டிருந்தது குறித்து தோண்ட முடிவு செய்தனர்.

விராலிமலை வட்டாட்சியர் கருப்பையா முன்னிலையில் கிணறு தோண்டப்பட்டபோது உள்ளே ஆரோக்கிய மேரியின் சடலம் இருந்தது இதை தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் உடற்கூறுவாய்வுக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான ராயப்பனை தேடி வருகின்றனர்

Tags

Next Story