மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் பலி

மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் பலி

விபத்தில் பலியானவர்

சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தென் பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி மகன் சூர்யா வயது 24 இவர் முதுநிலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் சோலைமுத்து வயது 17 என்பவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் மூலம் ராயப்பனூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று மீண்டும் இவரது வீட்டிற்கு செல்ல வி கூட்ரோடு அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது இவருக்கு எதிர் திசையில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த தாகம் தீர்த்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் வெங்கடேசன் வயது 17 ,குமார் மகன் பூவரசன் வயது 16, வாசுதேவனூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் வீரப்பன் (எ) செந்தில்குமார் 48,ஆனந்தன் மகன் ஆகாஷ் வயது 21 வயது ஆகிய நான்கு நபர்களும் வந்து மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தலைப்பகுதியில் பலத்த அடிபட்ட சூர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஐந்து பேர் பலத்த அடிப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story