டாட்டா ஏஸ் வாகனம் மோதியதில் இளைஞர் பலி !

டாட்டா ஏஸ் வாகனம் மோதியதில் இளைஞர் பலி !

விபத்து

கோபால்பட்டி அடுத்துள்ள வேம்பார்பட்டியில் மலைப்பட்டியை சேர்ந்த கண்ணன் மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டி அடுத்துள்ள வேம்பார்பட்டியில் மலைப்பட்டியை சேர்ந்த சுப்புராஜ் மகன் கண்ணன் (வயது 19) என்பவர் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த டாட்டா ஏஸ் வாகனத்தின் மீது மோதியதில் கண்ணன் என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story