வேன் மோதி இளைஞர் பலி

வேன் மோதி இளைஞர் பலி
ஆலங்குளம் அருகே வேன் மோதி இளைஞர் பலி
ஆலங்குளம் அருகே வேன் மோதி இளைஞர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம்0ஆலங்குளம் அடுத்த காசியாபுரம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் கவுதம் (25). இவர் நேற்று மதியம் தனது நண்பருடன் அங்குள்ள ஒரு கோவிலில் அன்னதானம் சாப்பிட்டுவிட்டு, பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நல்லூர் விலக்கு அருகே வந்தபோது, எதிரே வந்த வேன் மோதியதில் கௌதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக, வேன் டிரைவர் துரைப்பாண்டியை (45) போலீசார் கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story