எல். ஆர். ஜி கல்லூரியில் இளைஞர் இலக்கிய திருவிழா

எல். ஆர். ஜி கல்லூரியில் இளைஞர் இலக்கிய திருவிழா

பரிசளிப்பு 

திருப்பூர் எல்.ஆர்.ஜி கல்லூரியில் நடைபெற்ற இளைஞர் இலக்கிய திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திருப்பூர், தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறை,பொது நூலக இயக்ககம்,திருப்பூர் மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பாக சிறுவானி இளைஞர் இலக்கிய திருவிழா எல் ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவியருக்கு கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பரிசுத் தொகையும் சான்றிதழும் வழங்கப்ப்பட்டன. முதல் பரிசாக ரூ 5000, இரண்டாம் பரிசாக ரூ.4000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.3000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக எல்.ஆர்.ஜி. அரசு கல்லூரியில் நடைப்பெற்ற நூலக மன்ற விழாவில், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சுரேஷ் ,திரு மாவட்ட நூலக அலுவலர் கார்த்திகேயன், கண்காணிப்பாளர் ஶ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சுரேஷ் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எழிலி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை கல்லூரி நூலகர் அனுராதா மற்றும் பொது நூலகத்துறை நூலகர்கள் வனிதா, பாக்கிய லட்சுமி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Tags

Next Story