திருப்பூர் மாவட்ட நூலக ஆணைக் குழு சார்பாக இளைஞர் இலக்கியத் திருவிழா

திருப்பூர் மாவட்ட நூலக ஆணைக் குழு சார்பாக இளைஞர் இலக்கியத் திருவிழா


திருப்பூர் மாவட்ட நூலக ஆணை குழு சார்பாக இளைஞர் திருவிழா இரண்டு நாட்களாக நடைபெற்றது.


திருப்பூர் மாவட்ட நூலக ஆணை குழு சார்பாக இளைஞர் திருவிழா இரண்டு நாட்களாக நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட நூலக ஆணை குழு சார்பாக இளைஞர் இலக்கியத் திருவிழா இரண்டு நாட்களாக நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை கீழ் இயங்கும் பொது நூலக இயக்ககம் திருப்பூர் மாவட்ட நூலக ஆனைக்குழு சார்பாக இளைஞர் இலக்கியத் திருவிழா திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல் ஆர் ஜி அரசு மகளிர் கலை கல்லூரியில் நேற்றும் இன்றும் என இரண்டு நாட்கள் நடைபெற்றது.

மாணவிகளுக்கான இரண்டு நிமிட பேச்சுப்போட்டி , நூல் அறிமுக போட்டி , இலக்கிய வினாடி வினா , ஓவியப்போட்டி , விவாதம் போட்டி என பத்து போட்டிகள் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் 400க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்ட தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியதாகவும் , ஒவ்வொரு போட்டியின் கீழ் மூன்று மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக 2000 ரூபாய் மூன்றாம் பரிசாக 3 ஆயிரம் ரூபாய் என வழங்கப்பட இருப்பதாகவும் , இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகின்ற 24 மற்றும் 25ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ள சிறுவாணி இலக்கிய திருவிழாவில் பரிசுகள் வழங்கப்பட இருப்பதாகவும் நூலக ஆணைக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story