கெங்கவல்லி அருகே கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் மர்மசாவு !

கெங்கவல்லி அருகே கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் மர்மசாவு !
கெங்கவல்லி 
கெங்கவல்லி அருகே கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் மர்மசாவு - போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம் பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 29). இவருக்கு வினோதினி என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த பவித்ரா (24) என்பவர் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதற்கிடையே பவித்ராவுக்கும், சரவணனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது. பின்னர் அவர்களுக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாம். நேற்று மன்தினம் இரவு சரவணன் செல்போனில் பவித்ராவை தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதனால் சரவணன், பவித்ரா வீட்டிற்கு சென்றாராம். அங்கு கதவில் தாழ்ப்பாள் இல்லாததால் வீட்டுக்குள் சென்றாராம். பின்னர் அங்கிருந்த துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று காலை பவித்ரா எழுந்து பார்த்தபோது சரவணன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சரவணின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story