கல்லூரி மாணவியை 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது!

கல்லூரி மாணவியை  2-வது திருமணம் செய்த வாலிபர் கைது!

கைது

முதல் மனைவிக்கு தெரியாமல் கல்லூரி மாணவியை இரண்டாவது திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவரது தாயார் மீது வழக்கு பதிவு.
வேலூர் மாவட்டம் வடுகன்தாங்கலை அடுத்த விக்கிரமாசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன். இவரின் மகன் முரளி, ஹாலோ பிரிக்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், சினேகா (வயது 21) என்பவருக்கும் 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. லத்தேரியை அடுத்த பி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க ஒரு கல்லூரி மாணவியை முரளி முதல் மனைவியான சினேகாவுக்கு தெரியாமல் ஒரு மாதத்துக்கு முன்பு 2-வதாக திருமணம் செய்து கொண்டு, ஒடுகத்தூர் அருகே ஒரு வாடகை வீட்டில் தனிக் குடித்தனம் நடத்தி வந்தார். இந்தநிலையில் முரளி அடிக்கடி வெளியே சென்று வந்ததால் முதல் மனைவியான சினேகாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் 2-வது மனைவியான கல்லூரி மாணவிக்கும் தனது கணவர் அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு சென்று வந்ததால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி மாணவி தனது உறவினர்கள் மூலம் கணவரை பற்றி விசாரித்துள்ளார். அப்போது முரளி, ஏற்கனவே திருமணமானவர் எனத் தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி, முரளி தன்னை ஏமாற்றி 2-வதாக திருமணம் செய்துள்ளதை நினைத்து மனவேதனை அடைந்தார். அதேபோல் சினேகா, முரளி தனக்கு தெரியாமல் மற்றொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்ததை கேள்விப்பட்டு குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், முரளி எனக்கு தெரியாமல் மற்றொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அதற்கு அவரின் தாயார் உடந்தையாக இருந்ததாக, கூறி முரளி மற்றும் அவரின் தாயார் செல்வி மீது புகார் செய்தார். அதேபோல் 2-வது மனைவியான கல்லூரி மாணவியும், முதல் திருமணத்தை மறைத்து, என்னை 2-வதாக திருமணம் செய்து கொண்ட முரளி மீது குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.தனித்தனியாக கொடுத்த புகார்களின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதுதொடர்பாக முரளி (24), அவரின் தாயார் செல்வி (45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Tags

Next Story