நாகர்கோவில் வாலிபர் கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது

நாகர்கோவில் வாலிபர் கொலை வழக்கு -  மேலும் ஒருவர் கைது
பைல் படம்
நாகர்கோவில் அருகே கோட்டாரில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் சபையார் குளம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (21) என்பவர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 6 பேர் கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பந்தம் தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து காந்திபுரத்தை சேர்ந்த பைசல் என்ற சேக் சையது (28), கரியமாணிக்கபுரம் ஆழ்வார் கோவில் தெருவில் சேர்ந்த தில்லை நம்பி (25) சுசீந்திரத்தை சேர்ந்த சனோஜ் என்ற பிளாக்கி (22) மற்றும் ராகுல் ,ஆசிப், அஜின் ஆகிய ஆறு பேர் மீது கொலை, உட்பட எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்த வடக்கில் தில்லை நம்பி, பைசல், ராகுல் ஆகிய மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். ஆசிப் என்பவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இந்த நிலையில் சனோஜ் என்ற பிளாக்கி நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story