வாலிபர் கொலை வழக்கு: 7பேருக்கு ஆயுள்தண்டனை

வாலிபர் கொலை வழக்கு: 7பேருக்கு ஆயுள்தண்டனை
வாலிபரை கொலை செய்த வழக்கில் 7 நபருக்கு ஆயுள் தண்டனை
வாலிபரை கொலை செய்த வழக்கில் 7 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ளது சுந்தர்ராஜபுரம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் ஆனந்தகுமார் ( 32 ) . இவரை பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு கடந்த 2023 ஆம் ஆண்டு சேத்தூர் பசும்பொன் நகர் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை அருகில் வைத்து மருதுபாண்டி (24),கருப்பசாமி ( 28), சுந்தரபாண்டி (23 ),விஜயராஜ் என்ற மோடி,அஜித்குமார் (23),

முத்துகிருஷ்ணன் (22) , மாசாணம் ( 29) ஆகிய 7 பேரும் சேர்ந்து ஆனந்தகுமாரை கொலை செய்ததாக வந்த புகார் அடிப்படையில் சேத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 7 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த கொலை தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது . இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதாகர் வாலிபர் ஆனந்தகுமாரை கொலை செய்த 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் தலா 4,500 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் இந்த வழக்கில் தண்டனை பெற்ற மருதுபாண்டி , கருப்பசாமி ஆகியோர் மீது மேலும் சில கொலை வழக்குகள் உள்ளன.மேலும் இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் மீது பல்வேறு வழக்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story