போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு...

போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு...

சங்ககிரி அருகே போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு. 

சங்ககிரி அருகே போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு.

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட இடங்கணசாலை நகராட்சி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் பூபதி (32). தமிழக ஊர்க்காவல் படையில் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் இளம்பிள்ளை பகுதியில் போதை மறுவாழ்வு மையம் நடத்தி வந்துள்ளார். கடந்த 8 மாதங்களாக நடத்தி வந்த நிலையில் இந்த மறுவாழ்வு மையத்தில் போதைக்கு அடிமையானவர்களுக்கு கட்டணம் பெற்றுக்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் இளம்பிள்ளை அடுத்த நடுவனேரி வேல கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் சந்திரசேகர் (29) பட்டதாரி இளைஞரான இவர் போதைக்கு அடிமையாகி உள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் பூபதி நடத்தி வந்த மறுவாழ்வு மையத்தில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு இவர் அதிக சத்தம் போட்டதாக அங்கிருந்த ஊழியர்கள் அவரை அடைத்து துன்புறுத்ததாகவும், இதனால் அவருக்கு உடல் நலம் குன்றி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் இதனால் அவரது தாயார் ஈஸ்வரி மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் தனது மகனை அடித்து கொன்று விட்டதாக அளித்த புகாரின் பேரில், மகுடஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story