அண்ணாமலை பாத யாத்திரையில் வாலிபரிடம் பிக்பாக்கெட் - 2 பேர் கைது

அண்ணாமலை பாத யாத்திரையில் வாலிபரிடம் பிக்பாக்கெட் - 2 பேர் கைது
பிக்பாக்கெட் அடித்த 2 பேர் கைது
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்த நாவல் மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் மகன் விஜய் (33). இவர் திண்டிவனத்தில் நடைபெற்ற பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் 2பேர், விஜய் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.200-ஐ திருடினர். உடனே விஜய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மர்மநபர்களை மடக்கி பிடித்து திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா பாண்டியூர் கிராமத்தை சேர்ந்த பாண்டி மகன் முனியசாமி (37), சங்கரகோட்டை அடுத்த பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன் மகன் செல்வகுமார் (44) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story