சிவகாசியில் வாலிபர் குத்திக்கொலை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

சிவகாசியில் வாலிபர் குத்திக்கொலை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
கொலை செய்யப்பட்ட வாலிபர்
சிவகாசியில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே உடலில் ரத்த காயங்களுடன் வாலிபர் சடலமாக மீட்பு சடலமாக மீட்பு ... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் சக நண்பர்கள் பீர் பாட்டிலால் குத்தியதாக தெரிகிறது.

சிவகாசியில் இருந்து சாத்தூர் செல்லும் சாலையில் உடலில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் வாலிபர் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அதன் பேரில் விரைந்து சென்ற சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தவரை உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரது உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயம் இருப்பதால் முன்பாக காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்கிற கோணத்திலும் ,CCTV காட்சியை வைத்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story