தனியார் பேருந்தை வழிமறித்து டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

தனியார் பேருந்தை வழிமறித்து டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

பைல் படம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே தனியார் பேருந்தை வழிமறித்து டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பின்னவாசல் ஜீவானந்தம் தெருவை சேர்ந்தவர் 44 வயதான சுதாகரன். இவர் திருச்சியிலிருந்து அரியலூர் செல்லும் தனியார் பேருந்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திருச்சியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரியலூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அதேபோல் லால்குடி அருகே பச்சாம்பட்டை பகுதியைச் சேர்ந்த சில வாலிபர்கள் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அனுவித்துவிட்டு பச்சாம்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் அருகே திருச்சி லால்குடி சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வாலிபர்கள் பேருந்தை மறித்து ரகளையில் ஈடுபட்டு வீண் தகராறு செய்து பேருந்து டிரைவரை தாக்கி தகாத வார்த்தையால் திட்டி உள்ளனர். பின்னர் லால்குடி டிஎஸ்பி அந்த வழியாக சென்றபோது தகராறு செய்த அனைவரும் தப்பி சென்று விட்டனர்.

அதில் மது போதையில் இருந்த லால்குடி அருகே பச்சாம்பேட்டை தெற்கு தெருவைச் சேர்ந்த 26 வயதான சந்துருவை போலீசார் பிடித்தனர். பின்னர் கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். இச்சம்பவம் குறித்து தனியார் பேருந்து டிரைவர் சுதாகரன் கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்துருவை கைது செய்தனர்.

Tags

Next Story