பசுவை மீட்ட இளைஞர்கள் - பொதுமக்கள் பாராட்டு!!

பசுவை மீட்ட இளைஞர்கள் - பொதுமக்கள் பாராட்டு!!

பசு

சூரங்குடியில் சேற்றில் சிக்கி போராடிய பசுவை பத்திரமாக மீட்ட இளைஞர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் சாலையோரங்கள், மற்றும் வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. அதேபோல விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி பகுதியில் வயல்வெளியில் தேங்கியிருந்த மழை நீரில் தண்ணீர் குடிக்க சென்ற பசுமாடு ஒன்று சேற்றில் சிக்கிக்கொண்டு மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், சேற்றில் இறங்கி பசு மாட்டினை பெரும் சிரமத்திற்கு இடையில் போராடி பத்திரமாக மீட்டனர். பசுவை மீட்ட இளைஞர்களுக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இளைஞர்கள் சேற்றில் சிக்கித் தவித்த பசு மாட்டை மீட்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story