வெங்களாபுரத்தில் மதுபாட்டில் கடன் கேட்டு மண்டையை உடைத்த வாலிபர்கள்?

வெங்களாபுரத்தில் மதுபாட்டில் கடன் கேட்டு மண்டையை உடைத்த வாலிபர்கள்?

கோப்பு படம் 

திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பவரிடம் கடன் கேட்டு மண்டையை உடைத்த வாலிபர்கள்? குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் சக்தி என்பவர் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்துவந்துள்ளார். இந்த நிலையில் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் அங்கு சென்று காசு கம்மியா இருக்கு நாளைக்கு தருகிறேன் என்று மது பாட்டில்கள் கேட்டதாக தெரிகிறது. இதனால் சக்தி தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் மது பாட்டில்கள் விற்பனை செய்யும் நபரை வெளுத்து வாங்கினர். இதனால் சக்திக்கு தலையில் காயம் ஏற்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து திருப்பத்தூர் கிராமிய போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story