மண்டல அளவிலான சதுரங்கப் போட்டி - செந்தூரான் பாலிடெக்னிக் முதலிடம்

மண்டல அளவிலான சதுரங்கப் போட்டி - செந்தூரான் பாலிடெக்னிக் முதலிடம்

சதுரங்கம் 

பாபநாசத்தில் நடந்த மண்டல அளவிலான சதுரங்க போட்டியில் லேனா விளக்கு செந்தூரன் பாலிடெக்னிக் கல்லூரி முதலிடம் பெற்றது.
தஞ்சை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான சதுரங்க போட்டி பாபநாசம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது.அதில் இறுதி போட்டியில் கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வென்று லேனா விளக்கு செந்தூரன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியில் பாராட்டு விழா நடந்தது. மாணவர்களை முதன்மை செயல் அலுவலர் கார்த்திக் பாராட்டி பரிசு வழங்கினார்.உப தலைவர் நடராஜன், தாளாளர் ராமையா, முதன்மை செயல் இயக்குனர் பாண்டிய கிருஷ்ணன், மனிதவள இயக்குனர் மீனா வயிரவன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்...

Tags

Next Story