அழகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு கொலையா தற்கொலையா என காவல்துறையினர் விசாரணை.

அழகிய நிலையில்  ஆண் சடலம் கண்டெடுப்பு கொலையா தற்கொலையா என காவல்துறையினர் விசாரணை.

ஆண் சடலம் கண்டெடுப்பு

கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

அழகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு கொலையா தற்கொலையா என காவல்துறையினர் விசாரணை. வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளி மலை அடிவாரத்தில் உள்ள மரத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் தூக்கில் தொங்கியவாறு அழுகிய நிலையில் சடலமாக இருப்பதைக் கண்ட அந்த பகுதியில் ஆடு மேய்க்க வந்தவர்கள் மேல்பாடி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்தனர். அதனை அடுத்து மேல்பாடி கிராம நிர்வாக அலுவலர் மேல்பாடி போலீசாருக்கு புகார் அளித்தார்.

புகாரின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக இருக்கும் நபர் யார் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேறு யாராவது இந்தப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டு கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு சென்றிருக்கிறார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Tags

Next Story