மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் ச.உமா வழங்கினார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்  மாவட்ட ஆட்சியர் ச.உமா வழங்கினார்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் நடைபெற்றது.

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 466 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினர். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், நுண் நிதி கடன் திட்டத்தின் மூலம் 15 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.10.50 லட்சம் மதிப்பில் கடனுதவியும், வேளாண்மைத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2022 – 2023 ன் கீழ், ரூ.2,480 மதிப்பில் 1 விவசாயிக்கு மானியத்துடன் மின்கலத் தெளிப்பான் கருவியும், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் எண்ணெய்வித்து காரிப் 2023 ன் கீழ், 2 விவசாயிகளுக்கு மானியத்துடன் வேளாண் இடுபொருள்களையும், முதலமைச்சரின் விரிவான மருத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத் திறனாளிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story