சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்த அனுமதி பஞ்சாயத்து தலைவர் ஆட்சியரிடம் கோரிக்கை

சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்த அனுமதி  பஞ்சாயத்து தலைவர் ஆட்சியரிடம் கோரிக்கை

சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்த அனுமதியளிக்க வேண்டும் என, முட்டாஞ்செட்டி ஊராட்சி மன்ற தலைவர் பி.கமலப்பிரியா நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், முட்டாஞ்செட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் கமலப்பிரியா, இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில்,

சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, முட்டாஞ்செட்டி ஊராட்சியில் அனைவருக்கும் காவிரிக் குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த 5 ஆம் தேதி முட்டாஞ்செட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டது. எனினும், வார்டு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்காததால் கூட்டம் நடத்தப்படவில்லை. பின்னர் 7 ஆம் தேதி கிராம பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தடைவிதித்து உத்தரவிட்டார்.

எனவே கூட்டம் நடத்தப்படவில்லை. இச்சூழலில் ஊராட்சியின் வளர்ச்சிக்காக சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்த, அனுமதியளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story