தீ விபத்தில் ஒரு வயது குழந்தை பலி

தீ  விபத்தில் ஒரு வயது குழந்தை பலி

தீ விபத்து நடந்த வீடு 

திருத்தணி முருகப்பா நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பிரேம்குமார் (வயது 32). இவரது வீட்டின் கீழ் பகுதியில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பிரேம்குமார், அவரது மனைவி மஞ்சுளா (31), குழந்தைகள் மிதுலன் (2), நபிலன்(1) உள்ளிட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். திருத்தணி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக 4 பேரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை நபிலன் உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார். நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் திருத்தணி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.




Tags

Next Story