கொண்டாபுரம் ஏரியில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க கோரிக்கை

கொண்டாபுரம் ஏரியில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க கோரிக்கை

சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம் 

ஆர்கே பேட்டை, செப்.10: ஆர்கே பேட்டை ஒன்றியம்

கொண்டாபுரம் ஏரியில் நீரேற்று நிலையம் உள்ளது.


இதற்காக அமைக்கப்பட்ட மின்கம்பம் தற்போது சாய்ந்த நிலையில் உள்ளது.

இந்த ஏரிக்கு அருகாமையில் விவசாயிகள் தங்களது கால்நடைகளான ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு வருகின்றனர்.

ஏரிக்கு அருகில் சாய்ந்த நிலையில் இருக்கும் மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து ஏரியில் விழும் நிலையில் உள்ளது.

மேய்ச்சலுக்கு ஒரு மாடு மாடு மாடுகள் ஏரியில் தண்ணீரை குடித்து செல்லும் சூழ்நிலையில் மின்கம்பம் முடிந்து ஏரியில் விழும் போது தண்ணீரை குடிக்கும் ஆடு மாடுகள் உயிர் இழக்கும் நிலை உள்ளது.

எனவே அசம்பாவிதம் நடப்பதற்கு முன் மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Tags

Next Story