ஆர்கே பேட்டை ஒன்றியம் சமத்துவபுரத்தில் புதிய பேருந்து நிழற்குடை அமைக்க கோரிக்கை

ஆர்கே பேட்டை ஒன்றியம் சமத்துவபுரத்தில் புதிய பேருந்து நிழற்குடை அமைக்க கோரிக்கை

முள் புதர்செடிகள் அடர்ந்து காணப்படும் நிழற்குடை

ஆர்.கே பேட்டை செப்.10

திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட சமத்துவபுரம் கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை அமைக்கப்பட்டது.

சமத்துவபுரம் கிராமத்திலிருந்து திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த பேருந்து நிழற்குடையைபயன்படுத்தி வந்தனர்.





ஆனால் தற்போது நிழற்குடை அருகே முள் புதர்செடிகள் அடர்ந்து மண்டி காணப்படுவதால் பயனற்று

கானப்படுகிறது.

எனவே புதிதாக அமைக்கப்படும் புதிய நிழற்குடையை கான்கிரீட்டால் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என பகுதி மக்கள் ஒன்றிய நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story