பள்ளிபாளையம் அருகே கரும்பு டிராக்டரில் சிக்கி தாய், மகள் பலி

பள்ளிபாளையம் அருகே கரும்பு டிராக்டரில் சிக்கி தாய், மகள் பலி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள சின்னார்பாளையத்தை சேர்ந்தவர் ராஜவேலு. விவசாயியான இவருக்கு தவமணி என்ற மனைவியும் நான்கு பெண் குழந்தைகளும் உள்ளனர். மூத்த மகள் இந்துமதி. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை வீட்டிலிருந்து தவமணியும், இந்துமணியும் இறையமங்கலம் சென்றனர். இந்துமதியின் தங்கையை பார்த்து விட்டு இருவரும் டூவீலரில் இரவு வீட்டுக்கு திரும்பினர். வழியில் கொக்கராயன்பேட்டை அடுத்துள்ள கொம்பு மேட்டில் இருவரும் வந்து கொண்டிருந்தனர். அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த கரும்பு டிராக்டரை இந்துமதி முந்த முயன்றார். அப்போது எதிரே திடீரென ஒரு வாகனம் வந்ததாக தெரிகிறது. இதனால் நிலை தடுமாறிய இந்துமதியின் டூவீலர் கரும்பு டிராக்டரில் சிக்கியது. டிராக்டரின் பின்பக்கம் டூவீலர் மீது ஏறியது. இதில் இந்துமதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தாய் தவமணி பலத்த காயங்களுடன் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர் தவமணி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story