மோகனூர் அருகே ஆடு திருடிய 2 பேருக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை

மோகனூர் அருகே ஆடு திருடிய 2 பேருக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை

ஆடு திருடிய 2 பேருக்கு சிறை 

மோகனூர் அருகே ஆடு திருடிய 2 பேருக்கு தலா 1 ஆண்டு சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள அரசநத்தம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஊனாங்கல்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார் (38). விவசாயி. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். அவற்றை வீட்டின் அருகே உள்ள ஆட்டுப் பட்டியில் அடைத்து வைத்து இருந்தார்.

கடந்த மே மாதம் 8-ந் தேதி பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த வெள்ளாடுகள் திடீரென்று சத்தம் போட்டு கத்தியது. சந்தேகம் அடைந்த ரவிக்குமார் வெளியே வந்து பார்த்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஆடுகளை திருட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ஊர்பொதுமக்கள் உதவியுடன் ஆடு திருட முயன்றதாக மணியங்காளிப்பட்டியை சேர்ந்த பாண்டியன் (30), நெய்க்காரப்பட்டியை சேர்ந்த மணிமுத்து (25) உள்பட 3 பேரை பிடித்து மோகனூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு, நாமக்கல் 2-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவில், குற்றம்சாட்டப்பட்ட பாண்டியன், மணிமுத்து ஆகிய 2 பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் விஸ்வநாதன் தீர்ப்பு கூறினார்.

Tags

Next Story