கோட்டப்பாளையத்தில் விவசாய நிலத்தில் தீப்பிடித்தது

கோட்டப்பாளையம் விவசாய நிலத்தில் தீப்பிடித்து, கோரை பூற்கள் எரிந்து நாசமானது.

மல்லசமுத்திரம் அருகே, கோட்டப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வித்யா (21), அபிஷேக் (25) தம்பதியினர். இவர்களுக்கு சொந்தமாக மல்லசமுத்திரம் வையப்பமலை சாலையில் ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் கடந்த சில வருடங்களாக விவசாயம் செய்யாததால் கோரைப் பொருட்கள் நிறைந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று 12 மணியளவில், இந்த கோரை புற்களில் திடீரென தீப்பற்றியது. மல மலவென பரவிய தீ சுமார் 40 சென்ட் அளவிற்கு பரவியது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சு அடித்து தீயை அணைத்தனர். வயல்வெளிக்கு மேலே செல்லும் மின்சார வயர் உரசி தீப்பற்றி எறிந்ததா அல்லது மர்ம நபர்களால் ஏற்பட்ட தீ விபத்தா என்ற கோணத்தில் மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story