ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசை பூஜை

ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு முக்கிய அபிஷேகங்கள் நடைபெற்றது.

பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று பின்னர் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு மகா தீபாரணை நடைபெற்றது.

ஆடி அமாவாசை முன்னிட்டு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாரியம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

Tags

Next Story