சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் - நகர மன்ற தலைவர் தகவல்

சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் - நகர மன்ற தலைவர் தகவல்

 வங்கி கடன்

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் குமாரபாளையம் நகராட்சி எல்லைக்குட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு பிரதம மந்திரி ஸ்வான் நிதி திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் நகர மன்ற தலைவர் த. விஜய்கண்ணன் தலைமை தாங்கினார். ஆணையாளர் சரவணன், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் நகர மன்ற தலைவர் த.விஜய்கண்ணன் பேசும் போது, குமாரபாளையம் நகராட்சி எல்லைக்குட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் வங்கி கடன் பெற்று தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அது சமயம் சாலையோர வியாபாரிகள் தங்களுடைய ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், கைப்பேசி எண், கைபேசியுடன் மற்றும் கடையின் புகைப்படம் அடங்கிய விபரங்களுடன் பிரதி வாரம் புதன்கிழமை மற்றும் அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் நகராட்சி அலுவலகத்தில் நகர அமைப்பு ஆய்வாளரை தொடர்பு கொண்டு பதிவு செய்ய அவ்வாறு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு வங்கியின் மூலம் கடன் வழங்க நகராட்சி நிர்வாகம் பரிந்துரையின் பேரில் வங்கி கடன் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நகரமைப்பு ஆய்வாளர் ஜான்சி ராணி, நகராட்சி அதிகாரிகள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story