நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்

நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு ரத்ததான முகாம் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் திரளான பாஜக நிர்வாகிகள் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ராசிபுரம் நகரம் சார்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக நிர்வாகிகள் ரத்ததானம் முகாம் சிறப்பாக நடத்தினர். இதில் 30-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் ரத்ததான வழங்கி சிறப்பித்தனர். இந்த நிகழ்விற்கு பாஜக நகர துணைத் தலைவர் எஸ். குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் ஆர்.டி. இளங்கோ, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் ஏ. சம்பத்குமார், ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவு துணைத் தலைவர் மு. சிவபெருமாள், நகர ஓபிசி அணி தலைவர் எம்.பாஸ்கர், நகர இளைஞரணி பொதுச் செயலாளர் எஸ். நாகராஜன், நகர தொழில் பிரிவு தலைவர் எஸ். விஜயகுமார், நகர சிறுபான்மை அணி தலைவர் கே.அலாவுதீன், ராசிபுரம் நெசவாளர் பிரிவு தலைவர் கே. கணேசன், கிளைத் தலைவர் கே. முருகேசன், கிளைத் தலைவர் டி.அருள், கிளைத் தலைவர் ஆர். வில்லியம் ராஜ், 12 வது வார்டு சி.எஸ். சதீஷ்குமார், கிளைச் செயலாளர் சண்முகம், மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் ஆர்.ஜெ. நாகராஜன், முன்னால் நகர தலைவர் S.மணிகண்டன், 113 கிளை தலைவர் N. தங்கவேலு. உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story