பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியத்தில் காலை உணவு திட்டம்

பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியத்தில் காலை உணவு திட்டம்

காலை உணவு திட்டம் 

நாச்சிமுத்து துவக்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. திருக்குவளை பகுதியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை துவங்கி வைத்தார்.

அதன்படி பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் நாச்சிமுத்து பல்லக்காபாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்து, பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு உண்டார்.

இந்நிகழ்வில் நாமக்கல் அறங்காவல் குழு உறுப்பினர் சௌந்திரம் மற்றும் கழக நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story