புதுச்சத்திரம் அரசு பள்ளியில் காலை உணவுத் திட்டம் - பெ.ராமலிங்கம் எம்.எல்.ஏ பங்கேற்பு

புதுச்சத்திரம் அரசு பள்ளியில் காலை உணவுத் திட்டம் - பெ.ராமலிங்கம் எம்.எல்.ஏ பங்கேற்பு

 காலை உணவுத் திட்டம்

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக வழிநடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் பொற்கால ஆட்சியில் இந்தியாவிலேயே முதன்முறையாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, முத்தமிழறிஞர் கலைஞர் கல்வி பயின்ற நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை பள்ளியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு உணவு பறிமாறி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க புதுச்சத்திரம் அரசு தொடக்கப் பள்ளியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உணவு பறிமாறி அவர்களுடன் உணவருந்தினார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் காலை உணவுத் திட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு எழுது பொருட்களை பரிசாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சரவணன், வட்டார வருவாய் அலுவலர் சக்திவேல், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் M.P.கௌதம், தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஜெயப்பிரகாஷ், தலைமை ஆசிரியர் கௌரி, ஒன்றிய குழுத் தலைவர் சாந்தி சண்முகம், துணைத் தலைவர் ராம்குமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் செந்தில், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாஸ்கர், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் குமார், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அசோகன், சுந்தரம் மற்றும் கழக சார்பு அணி நிர்வாகிகள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story