மாவட்ட எஸ்.பியிடம் வணிகர்கள் கோரிக்கை !

மாவட்ட எஸ்.பியிடம் வணிகர்கள் கோரிக்கை !

வணிகர்கள் கோரிக்கை !

வணிக நிறுவனங்களில் இரவு நேர திருட்டுகளை தடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பியிடம் வணிகர்கள் கோரிக்கை !

எலச்சிப்பாளையம் பகுதியில் வணிக நிறுவனங்களில் தொடர்ந்து நடைபெறும் இரவு நேர திருட்டு சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி இன்று (26/07/2023) தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், எலச்சிப்பாளையம் அனைத்து வணிகர் சங்கத்தின் தலைவர் ராமசாமி மற்றும் நிர்வாகிகள் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் அவர்களை நேரில் சந்தித்தனர்.

திருட்டு சம்பவங்கள் தொடர்பான புகார்களுக்கு காவல்துறை உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கும் என உறுதியளித்த காவல் கண்காணிப்பாளர், வணிகர்கள் தங்கள் வணிக நிறுவன நுழைவாயிலில் சாலைகளை பதிவு செய்யும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, காவல்துறையின் அனுமதி பெற்று இரவு நேர ரோந்து பணிக்கு வணிகர் சங்கத்தின் சார்பில் ஆட்களை நியமிப்பது தொடர்பாக காவல் கண்காணிப்பாளரிடம் ஆலோசனை பெற்றனா்.

Tags

Next Story