செப்.20 முதல் சிமெண்ட் செங்கற்கள் விலை உயர்வு

சிமெண்ட் செங்கற்கள் விலை உயர்வு
வரும் செப். 20 முதல் சிமெண்ட் செங்கற்கள் விலை உயர்வு செய்யப்படும் என சிமெண்ட் கற்கள் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
குமாரபாளையம், பள்ளிபாளையம், வெப்படை,திருச்செங்கோடு, பவானி உள்ளிட்ட மேட்டூர் மண்டல பிளை ஆஷ் பிரிக்ஸ் அசோசியேசன் சார்பில் ஆலோசனை கூட்டம் குமாரபாளையத்தில் மண்டல தலைவர் தனபாலன் தலைமையில் நடந்தது. சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் மூலப்பொருட்கள் விலை உயர்வு, உற்பத்தி செலவு, பணியாட்கள் கூலி ஆகியவற்றால் இதுவரை ரூ. 6.50 க்கு விற்கப்பட்டு வந்த சிமெண்ட் கற்கள் செப். 20 முதல் 7:50 ரூபாய்க்கு விற்பதாக இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுவரை ஆதரவு கொடுத்து வந்த வாடிக்கையாளர்கள், பொறியாளர்கள், தொடர்ந்து ஆதரவு வழங்கி உதவ சங்கத்தின் சார்பில் கேட்டுகொள்கிறார்கள். துணை தலைவர் சங்கமேஸ்வரன் உள்பட சிமெண்ட் கற்கள் உற்பத்தியாளர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
