மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர்ச.உமா நல உதவிகள் வழங்கினார்

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 452 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமாவிடம் வழங்கினர்.

மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.6,000/- வீதம் ரூ.18,000/- மதிப்பில் 3 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரமும், 10.07.2023 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சலவைப் பெட்டி கோரி மனு அளித்த 1 பயனாளிக்கு தாட்கோ சார்பில் ரூ.3,500/- மதிப்பில் சலவைப் பெட்டியும், ரூ.4,05,000/- மதிப்பில் 1 பயனாளிக்கு நிலம் வாங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடனுதவியும் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா வழங்கினார்.

மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், 2 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். இதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.2,780/- வீதம் ரூ.11,120/- மதிப்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு கதொலி கருவியும் மாவட்ட ஆட்சித்தலைவர் | வழங்கினார். மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன், மாவட்ட மேலாளர் தாட்கோ ராமசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story